Saturday 8 December 2012

எனது ட்வீட்டுகளில் சில..

நீ நல்லவன் தான்.ஆனா உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் கெட்டவங்ய #என்னை சுத்தி இருக்கிறவன் சொன்னது ____________________________________________________________________ ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமெனில், இறைவன் தற்காலிகமானவனே.. ____________________________________________________________________ திரைப்படங்களை ஆடியோ கேசட் வழியாக கேட்டு இன்புற்றது எமது சமூகம் மட்டுமே..அவ்வளவு கிரியேட்டிவிட்டி... _____________________________________________________________________ கடவுளுக்கு பூமி மிகவும் பிடித்துவிட்டது போல.ஆகவே குழந்தைகளாக பிறந்து கொண்டே இருக்கிறார்.. _____________________________________________________________________ ஆரம்ப கலவி மிக முக்கியமானது.. ______________________________________________________________________ உயிர் போகும் இறுதி நொடியில் இருக்கும் யோக்கியனாக ,வாழ்நாள் முழுதும் வாழ ஆசை.. _______________________________________________________________________ முடிவு என்பது ஒருமுறைதான்..அதை மாற்றினால் அது இன்னொரு ஆரம்பம் தான்.. ______________________________________________________________________ நீ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கெட்டவன் அல்ல.உனது அம்மாவால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நல்லவனே.. _______________________________________________________________________ எல்லாருக்கும் தெரிந்த போலியான உரையாடல், “எப்படியிருக்கே” “நல்லாயிருக்கேன்” என்பதே.. ______________________________________________________________________ ரத்தத்தை விட கண்ணீர் வலிமையுடையது.. _____________________________________________________________________ சுருங்கிய ரத்ததுளியின் நீட்சியில் பிரதிபலிக்கிறது உனது பிம்பம்.. ____________________________________________________________________ விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது காதல்... ____________________________________________________________________ கம்ப்யூட்டர் ஸ்லோவா இருக்குன்னு வருத்தப்படாதீங்க.. கம்ப்யூட்டரை விட நீங்க ஸ்பீடா இருக்குறதா எண்ணி மனச தேத்திக்குங்க..#அவ்வ்வ் ____________________________________________________________________

No comments:

Post a Comment