Saturday 16 November 2013

அணையாத காமம்

சுக்கிலத்தை சுரக்கும் முயற்சியில்,உள்ளறையில் கேட்கும் ஈனக்குரல்.அதற்கு குறுக்கு கோடாக பிளேடை கூர்மைப்படுத்தும் ஓசை.அவனது இசையும்,ஓசையும் ஒன்றே;இரண்டையும் கேட்டுக்கொண்டே செயல்படும் லாவகம் அவனுக்கொன்றும் புதிதல்ல.இத்தோடு பதிமூன்று.பயன்படுத்திய மூன்றோ நான்கோ தான் இசையுடன் உச்சமுற வைத்தவை.ஆனால் இவளின் முனகலெனும் அப்பாற்பட்ட இசை என்றுமில்லாத எழுச்சியை தூண்டி,வேலையில் வேகமுற வைக்கிறது.கிரஹப்பிரவேஷம் செல்கையில் ஏற்படும் பரவசம் ஒருபுறம்,வீட்டை இடிக்கையில் ஏற்படும் பரவசம் ஒருபுறம்.இரண்டும் சேர்ந்த எதையும் சேராதவன் தான் இவன்.                                                                                                                                                                                                                                                               அவள் கண்களுக்கு அடைக்கப்பட்ட கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்: இவன் கண்களுக்கு கதவை திறந்தால் மருண்டவிழி பார்த்தவுடன்,இதுவரை ஓசையெழுப்பிய பிளேடு பயன்படுத்தப்படும்.அவனை உச்சமடையச் செய்ய அவனுக்கென்ன தயக்கம்.அவனுக்கென்ன அவள் பொண்டாட்டியா..தன்னை வருத்தி உறவுகொள்ள.. ரசிக்கவும்,புசிக்கவும் பெண் மட்டுமல்ல,ஆணும் தான்.ஆனால் இவன் இரையல்ல.இவனுக்கு புசிப்பதே குறி.. அதுவே அவனது குறிக்கு குறி... பெண்ணை மென்மையாக கையாளுவதில் சிறந்த அவன்,வலியற்றிருக்கயெண்ணி மிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிக மெதுவாக அவளது அமுதக்குரல்வளையை கலைநயத்தோடு ஓவியன் கோடுவரையும் லாவகத்தோடு அறுக்கையில் காதலைவிட உயிர்தெறிக்கும் கண்களை பார்ப்பதிலே அவனுக்கு எச்சமில்லா உச்சம்.

இன்றிருப்பவள் காதற்கடவுளா..காமக்கடவுளா... விவரிக்க அவனொன்றும் அதற்குள் அடங்கியவனா? அவள் அதற்குமப்பால் எனுமெண்ணம் இதுவரை அடைந்த இன்பமெல்லாம் துன்பமென்னும் சேதி விளித்து, உச்சத்தை ஏற்படுத்திய அவளை உபயோகப்படுத்த வேண்டுமென, கூர்மைப்படுத்தி உயரத்தூக்கிய பிளேடால் உயரத்தூக்கிய குறியை ஒரேவெட்டு.