கஷ்டம் வரும்போதுதான் கடவுள் ஞாபகம் வரும்.ஆனால் அதே கஷ்டம் அளவிற்குமீறி வந்தால்,கடவுளை திட்டத்தான் செய்வார்கள். அதனால்தான் எப்போதும் கடவுளை வணங்கும் கூடலிங்கம்கூட அன்று திட்டிக்கொண்டு இருந்தார்.இதேபோன்ற ஒரு சூழ்நிலைதான் நாற்பது வருடங்களுக்குமுன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வரத்தூண்டியது. அன்றைக்கு கூடலிங்கம் தனிமனிதன்.விட்டுச்செல்ல ஒன்றுமில்லாததால் நினைத்தவுடன் எங்கும் செல்லும் மனோநிலை இருந்தது.பெரும்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு, உறவுகளை எல்லாம் இழந்து,உயிர்வாழ ஊரைவிட்டு, நாட்டைவிட்டு நடப்பது நடக்கட்டும் என்றுதான்,அன்று இலங்கை வந்தார்.வந்தபின் உழைத்து மீண்டும் புது உறவுகளை உருவாக்கி, சமுதாயத்தில் முக்கியப்புள்ளி என்ற நிலைக்கு வந்தபின்பும் கஷ்டம் மட்டும் விட்டு விலகவில்லையே..கண்ணுக்கு கண்ணான மனைவி,கவலைகள் போக்க குறைவில்லாத குழந்தைகள் எட்டு,அரண்மனை போன்ற சொந்தவீடு, விவசாயம் செய்ய குளத்துடன் கூடிய நாற்பது ஏக்கர் நிலம்,நூற்றுக்கணக்கான மாடுகள் இவைகளெல்லாம் தனது சுயஉழைப்பால் வாங்கி வாழ்ந்துவந்தாலும், இப்போது உள்ள நிலை மிகவும் அபாயகரமானது.இந்த பூமியில் எந்தநேரம் யுத்தம் வருமோ?என்ன நடக்குமோ?என்ற பயத்துடனே வாழும்நிலை மிகுந்த கஷ்டம்தான்.
வாலிபப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் அவரது மகன் மற்றும் மகள்கள்தான் அவரது கவலைக்கு அடித்தளமிட்டவர்கள்.தினமும் அவர்கள் சந்திக்கும் நபர்கள்,அவர்களின் நடவடிக்கைகள் அனைத்திலும் கூடலிங்கத்திற்கு சுத்தமாக உடன்பாடில்லை.தமிழீழம் பற்றி தீவிரமாக பேசும் நபர்களுடன் தனது பிள்ளைகள் வைத்திருந்த தொடர்பால்,தனது குடும்பம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.அதனாலேயே தற்போது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு திரும்பவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. மனைவியிடமும்,பிள்ளைகளிடமும் கலந்தாகிவிட்டது.இனி எப்படி செல்வது என்பதைப்பற்றிய யோசனைதான்.கள்ளத்தோணி மூலமாகவாவது போய்விடவேண்டும் என்று கூறியிருந்தார்.இரு தினங்களுக்குப்பின் ஒரு தோணி கிளம்புவதாகவும், அதில் இடமிருந்தால் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருந்தார் அவருடைய நண்பர்.சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு வெறும் மனிதராக செல்லும்நிலையில் இருந்தாலும், தன் பிள்ளைகளை திசைமாறவிடாமல் கரைசேர்க்கும் முயற்சியில் இருந்தார் கூடலிங்கம்.இரண்டு நாட்களுக்குப்பின் அந்த படகில் இடமில்லையென்று நண்பர் சொல்லிவிட்டார்.ஆனால் மறுநாள் இரவு வேண்டிய ஒருவரின் படகு தமிழ்நாட்டிற்கு செல்வதாகவும்,அதில் அவர்களை ஏற்றி விடுவதாகவும் உறுதிகூறி,எப்போது,எங்கே வரவேண்டும் என்ற விபரத்தையும் சொன்னார் கூடலிங்கத்தின் நண்பர்.
மன்னாரில் இருந்து தலைமன்னாருக்கு மாட்டுவண்டியில் சென்று,இரவு அங்கு இருந்து படகில் கடல்வழியாக தமிழ்நாட்டை அடைவதுதான் திட்டம்.அதன்படி மறுநாள் மாலையில் தனது மனைவி,பிள்ளைகளை,கையில் என்னவெல்லாம் எடுத்துச்செல்ல முடியுமோ அவைகளை மட்டும் எடுக்கச்சொல்லி மாட்டுவண்டியில் ஏற்றி வீட்டுக்கதவைப் பூட்டினார்.திரும்பாத வீட்டிற்கு பூடு ஒருகேடா?என புலம்பிக்க்கொண்டே,மாட்டுக்கொட்டகைக்கு சென்று,கதவைத்திறந்து மாடுகளை வெளியேற்றிவிட்டு,”எங்கேயாவது சென்று உயிர்வாழுங்கள்” என்றுகூறி,இத்தனைநாள் உழைத்த விவசாய நிலத்தை கடைசியாக பார்த்தவாறே நின்றுவிட்டார்.பிள்ளைகள் எல்லாம்,”அப்பா..சீக்கிரம் வாருங்கள்.இரவு நெருங்கிவிட்டது”என்று கத்தினர்.கூடலிங்கம் அவர்களை திரும்பிப் பார்த்தார்.அவர் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. அவர் நிலத்தைப்பார்த்து கலங்கினாரா?பிள்ளைகளைப் பார்த்து கலங்கினாரா? என்பதே புதிர்தான்.எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததைப்போலவே, தற்போது போவதை எண்ணி வருந்திக்கொண்டு கிளம்பினார் அவர்.
தலைமன்னாருக்கு சென்று சேரும்போது,நன்றாக இருட்டிவிட்டது.அனைவரும் கீழே இறங்கி மாட்டுவண்டியை கடற்கரையிலேயே விட்டுச்சென்றனர்.அங்கு கூடலிங்கத்தின் நண்பர் நின்றிருந்தார்.அப்போது செல்லும் படகில் படகுக்காரரின் சகோதரிகள் இருவர் உடன் வருவதாகவும் கூறினார் அவர்.எல்லாரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.சற்றுநேரத்தில் படகுக்காரர் வந்தவுடன் அனைவரையும் படகில் ஏறி உட்காரச்சொன்னார்.சுமார் அறுபது பேர் இருக்கும்.அவரவர் கையில் ஆளுக்கொரு பையை வைத்திருந்தனர்.அனைவரும் உட்கார்ந்தபின்,படகு நகர ஆரம்பித்தது.கூடலிங்கத்தின் நண்பர் அனைவருக்கும் கையை ஆட்டி, விடைகொடுத்துக் கொண்டிருந்தார்.பயணம் ஆரம்பித்து சிறிதுதூரம் செல்லும்போதே,அலைகள் ஆளுயரத்திற்கு வந்து கொண்டிருந்தன.யாரும் சத்தம் போடக்கூடாது என்று படகுக்காரர் சொல்லியிருந்தார்.அதனால் படகு அலையில் ஏறி இறங்கும் போதெல்லாம் அனைவரும் மூச்சைப் பிடித்துக்க்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.அப்போது படகில் சிறிதுநீர் ஏறியதால் பளு அதிகமாக இருந்தது.உடனே படகுக்காரர், எந்தக்கேள்வியும் கேட்காமல் அனைவரின் கையில் இருந்த பைகளையும் கடலில் வீசியெறிந்தார்.யாரும் எதுவும் பேசவில்லை.உயிர் பிழைத்தால் போதும் என்று மட்டும்தான் இருந்தனர்.கண்முன்னே சிலமீட்டர் தூரத்தில் பனைமர உயரத்திற்கு பெரிய அலை வந்து கொண்டிருந்தது.அனைவரையும் நன்றாக பிடித்துக் கொள்ளச் சொன்னார் படகுக்காரர்.அடுத்த நிமிடம் அந்த பெரிய அலை அருகில் வந்துவிட்டது.எல்லாரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அடுத்த நொடி தாழ்வாக இருந்த படகு செங்குத்தாக உயரத்திற்கு சென்றுவிட்டது.கடற்பரப்பு விரிவாக இருளைப் போர்த்திக்கொண்டு தெரிந்தது.சடாரென்று படகு கீழிறங்கி, வயிற்றில் புளியைக் கரைத்தது.இப்படி ஒவ்வொரு அலையையும் தாண்டி,பயணித்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் ஆகியிருக்கும்.படகு தென்கடல் ஓரமாக வந்து கொண்டிருந்தது.அப்போது படகுக்காரர் யாரும் வெளிச்சம் தரும் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்க்கொண்டார்.ஏனென்றால் அந்த பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து இருக்கும், அவர்கள் கண்ணில் சிக்கினால் சுட்டுக்கொன்று விடுவார்கள் .எல்லாரும் அதன்படியே இருந்தபோது படகு ஒருபெரிய கப்பல் அருகில் வந்துவிட்டதை படகுக்காரர் உணர்ந்தார்.
அது இலங்கை கடற்[படையின் கப்பல் அவர்களும் விளக்கை அணைத்துவிட்டு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததால் தூரத்தில் வரும்போது தெரியவில்லை.அருகில் வந்தவுடன் கடற்படையில் ஒருவர் சிகரெட் பிடித்ததால் படகுக்காரர் பார்த்து விட்டார். வேறுதிசையை நோக்கி படகை செலுத்தினாலும் நகர மறுத்துவிட்டது.படைக்கப்பலில் ஒருவர் படகைப் பார்த்துவிட்டார்.உடனே அவர் மற்ற வீரர்களுக்கு சிங்கள மொழியில் ஆணையிட ஆரம்பித்தார்”அவர்களை சுடுங்கள்..அவர்களை சுடுங்கள்.”. அவ்வளவுதான்..படகில் இருந்த எல்லாரும் நீரில் குதித்து விட்டனர். படைக்கப்பலில் இருந்து விளக்கொளியும் அதைப்போன்றே தோட்டாக்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.கூடலிங்கம் குடும்பத்தாரும் ,படகில் வந்த பயணிகளும் தென்கடல் அலையடித்து ஒதுங்கிய மணல்திட்டுகளில் இருந்த கடற்தாவரங்களுக்கு இடையே மறைந்து கொண்டனர்.கப்பலின் விளக்கு வேறுதிசையில் தேடும்போது மணற்திட்டு வழியாக நகர ஆரம்பித்தனர். அந்த மணல்திட்டுகளின் கரையோரப்பகுதியில் கடல் நீர் நெஞ்சளவு இருந்தது.கடற்படையின் தாக்குதலில் பாதிப்பேர் உயிரிழந்து விட்டனர்.கணவன் இறந்ததை மனைவியும்,குழந்தை இறந்ததை தாயும் உணரக்கூட அவகாசமில்லாத நிலை அது.இதையெல்லாம் பார்த்த பிறருக்கு,அவர்களின் உயிர்மீதான வேட்கை அதிகரித்தது.வேகமாக கடலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போதுதான் முந்தினநாள் கிளம்பின படகு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு கவிழ்ந்து கிடப்பதை பார்த்தார்கள். ஆட்கள் தப்பியிருப்பார்களா என்பதே சந்தேகமாக இருந்தது.இன்று நாம் இருக்கும்நிலையில்தான் நேற்றும் அவர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்தவாறே வேகமாக நடந்தனர்.
கடலுக்குள் இருந்து கரையை நோக்கி நடக்கும்போது கால்களில் சங்குகளும்,அதைப்போன்று இருந்த பொருட்களும் கால்களில் குத்தின.அடுத்து காலகளில் சில பிணங்கள் தட்டுப்பட ஆரம்பித்தன. அவ்வளவுதான்..அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.பயத்தில் உடல் உதறியது.ஓர் அடிகூட நகர முடியவில்லை.நேற்றைக்கு வந்தவர்களின் உடல்களை மீன்கள் உண்டு, மீதியாக கடலுக்குள் புதைந்து கிடந்தன.ஆனால் என்ன செய்வது?உயிர் இருக்கும் வரை பிழைப்பதற்கான முயற்சிகளையாவது செய்வோம் என பயணித்தனர்.படகுக்காரரின் சகோதரிகள் இருவரும் உடனிருந்தனர்.அங்கு இருந்தவர்கள் அவர்களின் அண்ணன் எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்கள்” சீக்கிரம் வந்துவிடுவார்” என்று கூறியதால் நம்பிக்கையுடன் இருந்தனர்.அப்போது படகுக்காரர் மட்டும் தனியாக சென்று படகின் இஞ்சினை நிறுத்திவிட்டு, படகினை இழுத்துக்கொண்டே வந்தார்.பின்னர் எஞ்சியவர்கள் படகில் ஏறிஅமர்ந்து கொண்டு அதிகாலை வேளையில் கரையை நெருங்கினர். ராமேஸ்வரம் கோயில் கோபுரவிளக்கு உயிருக்கு ஒளியூட்டியது. சிறிதுநேரத்தில் படகில் இருந்த அனைவரும் கரையில் வந்து சேர்ந்தனர். உடனே தமிழக ரோந்துப்படைகள் அவர்களை சுற்றிவளைத்து,பலவித சோதனைகளுக்கு உள்ளாக்கினர்.பின்னர் கூடலிங்கத்தின் குடும்பத்தார் மற்றும் உடன் வந்தவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.அங்கு ஊர்மக்கள் பழைய உடைகளை அவர்களுக்கு கொடுத்து உதவினர்.அகதிகளின் முகாமைவிட்டு அவர்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று தடை போடப்பட்டிருந்தது.கூடலிங்கம் தான் பழைய நிலையைவிட மோசமாகிவிட்டதை உணர்ந்தார்.இப்போது தனது சொந்தநாட்டிலேயே அகதியாக இருப்பதை எண்ணி நொந்து கொண்டார். இருந்தாலும் நாம் செல்லும் இடமெல்லாம் பாதைகளே என்ற நம்பிக்கை,அவர் கண்களில் கம்பீரமாக இருந்தது.
வாலிபப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் அவரது மகன் மற்றும் மகள்கள்தான் அவரது கவலைக்கு அடித்தளமிட்டவர்கள்.தினமும் அவர்கள் சந்திக்கும் நபர்கள்,அவர்களின் நடவடிக்கைகள் அனைத்திலும் கூடலிங்கத்திற்கு சுத்தமாக உடன்பாடில்லை.தமிழீழம் பற்றி தீவிரமாக பேசும் நபர்களுடன் தனது பிள்ளைகள் வைத்திருந்த தொடர்பால்,தனது குடும்பம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.அதனாலேயே தற்போது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு திரும்பவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. மனைவியிடமும்,பிள்ளைகளிடமும் கலந்தாகிவிட்டது.இனி எப்படி செல்வது என்பதைப்பற்றிய யோசனைதான்.கள்ளத்தோணி மூலமாகவாவது போய்விடவேண்டும் என்று கூறியிருந்தார்.இரு தினங்களுக்குப்பின் ஒரு தோணி கிளம்புவதாகவும், அதில் இடமிருந்தால் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருந்தார் அவருடைய நண்பர்.சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு வெறும் மனிதராக செல்லும்நிலையில் இருந்தாலும், தன் பிள்ளைகளை திசைமாறவிடாமல் கரைசேர்க்கும் முயற்சியில் இருந்தார் கூடலிங்கம்.இரண்டு நாட்களுக்குப்பின் அந்த படகில் இடமில்லையென்று நண்பர் சொல்லிவிட்டார்.ஆனால் மறுநாள் இரவு வேண்டிய ஒருவரின் படகு தமிழ்நாட்டிற்கு செல்வதாகவும்,அதில் அவர்களை ஏற்றி விடுவதாகவும் உறுதிகூறி,எப்போது,எங்கே வரவேண்டும் என்ற விபரத்தையும் சொன்னார் கூடலிங்கத்தின் நண்பர்.
மன்னாரில் இருந்து தலைமன்னாருக்கு மாட்டுவண்டியில் சென்று,இரவு அங்கு இருந்து படகில் கடல்வழியாக தமிழ்நாட்டை அடைவதுதான் திட்டம்.அதன்படி மறுநாள் மாலையில் தனது மனைவி,பிள்ளைகளை,கையில் என்னவெல்லாம் எடுத்துச்செல்ல முடியுமோ அவைகளை மட்டும் எடுக்கச்சொல்லி மாட்டுவண்டியில் ஏற்றி வீட்டுக்கதவைப் பூட்டினார்.திரும்பாத வீட்டிற்கு பூடு ஒருகேடா?என புலம்பிக்க்கொண்டே,மாட்டுக்கொட்டகைக்கு சென்று,கதவைத்திறந்து மாடுகளை வெளியேற்றிவிட்டு,”எங்கேயாவது சென்று உயிர்வாழுங்கள்” என்றுகூறி,இத்தனைநாள் உழைத்த விவசாய நிலத்தை கடைசியாக பார்த்தவாறே நின்றுவிட்டார்.பிள்ளைகள் எல்லாம்,”அப்பா..சீக்கிரம் வாருங்கள்.இரவு நெருங்கிவிட்டது”என்று கத்தினர்.கூடலிங்கம் அவர்களை திரும்பிப் பார்த்தார்.அவர் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. அவர் நிலத்தைப்பார்த்து கலங்கினாரா?பிள்ளைகளைப் பார்த்து கலங்கினாரா? என்பதே புதிர்தான்.எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததைப்போலவே, தற்போது போவதை எண்ணி வருந்திக்கொண்டு கிளம்பினார் அவர்.
தலைமன்னாருக்கு சென்று சேரும்போது,நன்றாக இருட்டிவிட்டது.அனைவரும் கீழே இறங்கி மாட்டுவண்டியை கடற்கரையிலேயே விட்டுச்சென்றனர்.அங்கு கூடலிங்கத்தின் நண்பர் நின்றிருந்தார்.அப்போது செல்லும் படகில் படகுக்காரரின் சகோதரிகள் இருவர் உடன் வருவதாகவும் கூறினார் அவர்.எல்லாரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.சற்றுநேரத்தில் படகுக்காரர் வந்தவுடன் அனைவரையும் படகில் ஏறி உட்காரச்சொன்னார்.சுமார் அறுபது பேர் இருக்கும்.அவரவர் கையில் ஆளுக்கொரு பையை வைத்திருந்தனர்.அனைவரும் உட்கார்ந்தபின்,படகு நகர ஆரம்பித்தது.கூடலிங்கத்தின் நண்பர் அனைவருக்கும் கையை ஆட்டி, விடைகொடுத்துக் கொண்டிருந்தார்.பயணம் ஆரம்பித்து சிறிதுதூரம் செல்லும்போதே,அலைகள் ஆளுயரத்திற்கு வந்து கொண்டிருந்தன.யாரும் சத்தம் போடக்கூடாது என்று படகுக்காரர் சொல்லியிருந்தார்.அதனால் படகு அலையில் ஏறி இறங்கும் போதெல்லாம் அனைவரும் மூச்சைப் பிடித்துக்க்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.அப்போது படகில் சிறிதுநீர் ஏறியதால் பளு அதிகமாக இருந்தது.உடனே படகுக்காரர், எந்தக்கேள்வியும் கேட்காமல் அனைவரின் கையில் இருந்த பைகளையும் கடலில் வீசியெறிந்தார்.யாரும் எதுவும் பேசவில்லை.உயிர் பிழைத்தால் போதும் என்று மட்டும்தான் இருந்தனர்.கண்முன்னே சிலமீட்டர் தூரத்தில் பனைமர உயரத்திற்கு பெரிய அலை வந்து கொண்டிருந்தது.அனைவரையும் நன்றாக பிடித்துக் கொள்ளச் சொன்னார் படகுக்காரர்.அடுத்த நிமிடம் அந்த பெரிய அலை அருகில் வந்துவிட்டது.எல்லாரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அடுத்த நொடி தாழ்வாக இருந்த படகு செங்குத்தாக உயரத்திற்கு சென்றுவிட்டது.கடற்பரப்பு விரிவாக இருளைப் போர்த்திக்கொண்டு தெரிந்தது.சடாரென்று படகு கீழிறங்கி, வயிற்றில் புளியைக் கரைத்தது.இப்படி ஒவ்வொரு அலையையும் தாண்டி,பயணித்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் ஆகியிருக்கும்.படகு தென்கடல் ஓரமாக வந்து கொண்டிருந்தது.அப்போது படகுக்காரர் யாரும் வெளிச்சம் தரும் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்க்கொண்டார்.ஏனென்றால் அந்த பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து இருக்கும், அவர்கள் கண்ணில் சிக்கினால் சுட்டுக்கொன்று விடுவார்கள் .எல்லாரும் அதன்படியே இருந்தபோது படகு ஒருபெரிய கப்பல் அருகில் வந்துவிட்டதை படகுக்காரர் உணர்ந்தார்.
அது இலங்கை கடற்[படையின் கப்பல் அவர்களும் விளக்கை அணைத்துவிட்டு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததால் தூரத்தில் வரும்போது தெரியவில்லை.அருகில் வந்தவுடன் கடற்படையில் ஒருவர் சிகரெட் பிடித்ததால் படகுக்காரர் பார்த்து விட்டார். வேறுதிசையை நோக்கி படகை செலுத்தினாலும் நகர மறுத்துவிட்டது.படைக்கப்பலில் ஒருவர் படகைப் பார்த்துவிட்டார்.உடனே அவர் மற்ற வீரர்களுக்கு சிங்கள மொழியில் ஆணையிட ஆரம்பித்தார்”அவர்களை சுடுங்கள்..அவர்களை சுடுங்கள்.”. அவ்வளவுதான்..படகில் இருந்த எல்லாரும் நீரில் குதித்து விட்டனர். படைக்கப்பலில் இருந்து விளக்கொளியும் அதைப்போன்றே தோட்டாக்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.கூடலிங்கம் குடும்பத்தாரும் ,படகில் வந்த பயணிகளும் தென்கடல் அலையடித்து ஒதுங்கிய மணல்திட்டுகளில் இருந்த கடற்தாவரங்களுக்கு இடையே மறைந்து கொண்டனர்.கப்பலின் விளக்கு வேறுதிசையில் தேடும்போது மணற்திட்டு வழியாக நகர ஆரம்பித்தனர். அந்த மணல்திட்டுகளின் கரையோரப்பகுதியில் கடல் நீர் நெஞ்சளவு இருந்தது.கடற்படையின் தாக்குதலில் பாதிப்பேர் உயிரிழந்து விட்டனர்.கணவன் இறந்ததை மனைவியும்,குழந்தை இறந்ததை தாயும் உணரக்கூட அவகாசமில்லாத நிலை அது.இதையெல்லாம் பார்த்த பிறருக்கு,அவர்களின் உயிர்மீதான வேட்கை அதிகரித்தது.வேகமாக கடலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போதுதான் முந்தினநாள் கிளம்பின படகு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு கவிழ்ந்து கிடப்பதை பார்த்தார்கள். ஆட்கள் தப்பியிருப்பார்களா என்பதே சந்தேகமாக இருந்தது.இன்று நாம் இருக்கும்நிலையில்தான் நேற்றும் அவர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்தவாறே வேகமாக நடந்தனர்.
கடலுக்குள் இருந்து கரையை நோக்கி நடக்கும்போது கால்களில் சங்குகளும்,அதைப்போன்று இருந்த பொருட்களும் கால்களில் குத்தின.அடுத்து காலகளில் சில பிணங்கள் தட்டுப்பட ஆரம்பித்தன. அவ்வளவுதான்..அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.பயத்தில் உடல் உதறியது.ஓர் அடிகூட நகர முடியவில்லை.நேற்றைக்கு வந்தவர்களின் உடல்களை மீன்கள் உண்டு, மீதியாக கடலுக்குள் புதைந்து கிடந்தன.ஆனால் என்ன செய்வது?உயிர் இருக்கும் வரை பிழைப்பதற்கான முயற்சிகளையாவது செய்வோம் என பயணித்தனர்.படகுக்காரரின் சகோதரிகள் இருவரும் உடனிருந்தனர்.அங்கு இருந்தவர்கள் அவர்களின் அண்ணன் எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்கள்” சீக்கிரம் வந்துவிடுவார்” என்று கூறியதால் நம்பிக்கையுடன் இருந்தனர்.அப்போது படகுக்காரர் மட்டும் தனியாக சென்று படகின் இஞ்சினை நிறுத்திவிட்டு, படகினை இழுத்துக்கொண்டே வந்தார்.பின்னர் எஞ்சியவர்கள் படகில் ஏறிஅமர்ந்து கொண்டு அதிகாலை வேளையில் கரையை நெருங்கினர். ராமேஸ்வரம் கோயில் கோபுரவிளக்கு உயிருக்கு ஒளியூட்டியது. சிறிதுநேரத்தில் படகில் இருந்த அனைவரும் கரையில் வந்து சேர்ந்தனர். உடனே தமிழக ரோந்துப்படைகள் அவர்களை சுற்றிவளைத்து,பலவித சோதனைகளுக்கு உள்ளாக்கினர்.பின்னர் கூடலிங்கத்தின் குடும்பத்தார் மற்றும் உடன் வந்தவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.அங்கு ஊர்மக்கள் பழைய உடைகளை அவர்களுக்கு கொடுத்து உதவினர்.அகதிகளின் முகாமைவிட்டு அவர்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று தடை போடப்பட்டிருந்தது.கூடலிங்கம் தான் பழைய நிலையைவிட மோசமாகிவிட்டதை உணர்ந்தார்.இப்போது தனது சொந்தநாட்டிலேயே அகதியாக இருப்பதை எண்ணி நொந்து கொண்டார். இருந்தாலும் நாம் செல்லும் இடமெல்லாம் பாதைகளே என்ற நம்பிக்கை,அவர் கண்களில் கம்பீரமாக இருந்தது.