Thursday 21 April 2016

பத்த வச்சிட்டியே பரட்டை


இதற்கு மேலும் இருந்தால் உடைந்துவிடும் என்ற நிலையில் இருந்த அந்த சிகரெட்டை எடுத்தான் சோனைமுத்தன்.

"அண்ணே வத்திப்பெட்டி இருக்கா"

"ஆள் பாத்து கேளு தம்பி. மரியாதை முக்கியம்"

"மரியாதையா தான கேட்டேன். ரொம்ப சலிப்பா சொல்றிங்க. இருந்தா குடுங்க"

"மறுபடியும் பார்றா" "பளார்"

"என்னைய அடிச்சீட்டில்ல. இந்தா ஆளை கூட்டிட்டு வர்றேன்"

கிட்டத்தட்ட இருபதுபேர் வந்து அடித்தவரை புரட்டி எடுத்து விட்டார்கள். 

"என்னையவே அடிச்சிட்டீங்க்கல்ல. நானும் வர்றேண்டா ஆட்களோட"

அவர் சார்பாக ஐம்பது பேர் வந்து துவம்சம் செய்து விட்டனர். அதை பார்த்த ஊர்க்காரர்கள்,

 "எங்க ஊர்க்காரர்களையே அடிக்கிறீங்களா"

 என்று பதிலுக்கு அடித்தார்கள். பெரிய கலவரம் ஆகிவிட்டது. அதனை அடக்க மாநில அரசால் முடியவில்லை. ஒரு பக்கம் சாதி, மறுபக்கம் மதம் கையிலெடுக்கப்பட்டது.  மாநில அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. துணைநிலை ராணுவம் வரவழைக்கப்பட்டது. கடுமையான முயற்சியின் காரணமாக கலவரத்தில் ஒரு சாரார் பாதிக்கப்பட்டனர்.

இதனை கண்காணித்துக்கொண்டே இருந்த ஒருநாடு,

 "எப்படி எங்கள் மதத்தவர் மீது தாக்குதல் நடத்தலாம்"

 என்று கடுமையாக கேட்டு, தாக்குதலுக்கு தயாரானது. 
இதை அறிந்த நட்பு நாடு,
 
"நீங்கள் தாக்கினால் நாங்களும் தாக்குவோம்"
 
என ஆதரவிற்கு வந்தது.  அந்தநேரம் வந்த நட்பு நாட்டின் விமானம் தற்செயலாக விபத்துக்குள்ளாக, நட்பு நாடு கடும்கோபம்  கொண்டு தாக்குதலை ஆரம்பித்து விட்டது. அந்த இரு நாடுகளுக்கும் ஆதரவாக உலக நாடுகள் இரு அணிகளாக திரண்டனர். விமான தாக்குதல்கள், அணுகுண்டு தாக்குதல்கள் மூலம் போர் பெரிய அளவில் ஆரம்பித்தது.


சோனைமுத்தன் இன்னமும் பத்த வைக்காத சிகரெட்டிற்காக, வத்திப்பெட்டி வைத்திருப்பவரை தேடிக்கொண்டிருந்தான்

Wednesday 10 December 2014

சிங்கம் PART 3


                             போதைமன்னன் டேனியை அரெஸ்ட் பண்ண கையோட, அவனுக்கு தண்டனை வாங்கி தர்றதுக்கு எவிடென்ஸ் கலெக்ட் பண்றதுக்காக சுவிட்சர்லாந்து போறாரு துரைசிங்கம். யாருக்கும் சந்தேகம் வராம இருக்குறதுக்காக, சுவிட்சர்லாந்துல இருக்கும் "காளியம்மன் மாரியம்மன் இன்டர்நேஷனல் பேங்க்"ல செக்யூரிட்டியா வேலைக்கு சேர்றாரு. அப்போதான் டெய்லி இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் அங்கு வந்து போறதைப் பாக்குறாரு. உடனே தனக்கு எப்பவும் சப்போர்ட் பண்ற அமைச்சருக்கு மிஸ்டுகால் குடுக்குறாரு. அமைச்சர் அரசாங்க போன்ல கால் பண்ணி,
"என்னாச்சு துரைசிங்கம்"
"சார்.. நாம நினைச்சது மாதிரி இல்ல சார்.அதைவிட இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கிற மாதிரி கருப்பு பணத்தை எல்லாம் பதுக்கி வச்சிருக்காங்க"
"இப்ப என்ன செய்யுறது துரைசிங்கம்"
"கொஞ்சம் சுண்ணாம்புக்கல்லும், ஒரு தென்னைமட்டை பிரஷ்ஷும் அனுப்பி வைங்க.வெள்ளை அடிச்சு வைக்கிறேன். உடனடியா ஒரு ஆபரேசன் பண்ணனும் சார்"
"ஏதாவது கல்லடைப்பா துரைசிங்கம்"
"சார்.. பதிலுக்கு மொக்கை போட்டது போதும். உடனே "ஆபரேஷன் பி" ஸ்டார்ட் பண்ணனும். பி ஃபார் பிளாக் மனி"
"என்னாது பிளாக் மனியா.."
"ஆமா சார்.நீங்க உடனடியா நம்ம பிரதமர்கிட்ட பேசுங்க"
"என்னாது பிரதமர்கிட்ட பேசணுமா.."
"யோவ்..நான் சொல்றதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கியா.. இரு இந்தியா வந்து உன்னை வச்சிக்கிறேன்"
....போன் கட். (இடைவேளை)
                                           ஆபரேசன் பிளாக் மனிப்படி, துரைசிங்கம் பழைய பேப்பர் வாங்குற ஆளு மாதிரி ஒவ்வொரு பேங்க்கா போயி, "பழைய நோட்டு இருக்கா.. பழைய நோட்டு இருக்கா"ன்னு கூவுறாரு. எந்த பேங்க்லயும் ஒரு தூசிகூட அசையல. எந்த பேங்க்லயும் எதுவுமே இல்ல. அப்போதான் தெரியுது டெய்லி அங்க வந்துபோன இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் பணம் போட வரலை.. போட்ட பணத்தை எடுத்துட்டு போகத்தான்னு. இப்போ துரைசிங்கத்தோட அடுத்த புராஜெக்ட் அந்த பணத்தையெல்லாம் தேடி, அண்டார்டிகாவுக்கு போறது தான்.

Wednesday 9 April 2014

MUSIC

                                  அந்த ஊரில் இருக்கும் எல்லாருமே இசைப்பிரியர்கள். இசைப்பிரியர்களில் இரண்டு வகைதான். ஒன்று, பாட்டு பாடுபவர்கள்.இரண்டு, பாட்டு கேட்பவர்கள். அதில் உயர்திணை, அஃறிணை எல்லாம் கிடையாது. பாட்டாலேயே அந்த ஊர் இயங்கியது என்றே சொல்லலாம். நாற்று நடுவதானாலும் சரி, அறுவடையானாலும் சரி, வேலை நடக்குதோ இல்லையோ, பாட்டு மட்டும் வேளாவேளைக்கு பாடி விடுவார்கள்.

                                       ஒருமுறை பசுமாட்டுக்கு மடியில பால்கட்டி, பால்சுரக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்துச்சு. மாட்டுக்காரன் டாக்டர்கிட்ட போகலை.நேரா பசுநேசன்கிட்ட தான் போனான்.பசுநேசனும் விசயத்தை கேள்விப்பட்டவுடன், வேட்டியக்கூட கட்டாம போட்டுருந்த டவுசரோடயே போயிட்டாரு. போன வேகத்துலயே, "செண்பகமே.. செண்பகமே"ன்னு பாட்டை அவுத்து விட்டாரு. அதைக்கேட்ட பசு,அய்யய்யோ இந்தாளு காதுல ரத்தம் வரவச்சிருவான் போலேயேன்னு பயந்து, பாத்திரம் பத்தாத அளவுக்கு பால் குடுத்துச்சு. இன்னொருநாள் ஜல்லிக்கட்டு நடந்துச்சு. பேச்சியம்மன் கோயில்காளை எவனுக்கும் அடங்காம ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்துச்சு. அங்கேயும் காளைக்கு முன்னாடி துணிச்சலா நின்னு, "பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி"ன்னு பாடுனாரு. அதைக்கேட்ட காளை, ஆளைவிடுறா சாமின்னு ஊரைவிட்டே ஓடிருச்சு. இந்த அதிசயத்தை கேள்விப்பட்ட பாம்பேயில இருந்து வந்த லிவிங்ஸ்டன் இன்னிசைக்குழுவினர் அவரை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க. அவரும் பெரிய பாடகராகி அங்கேயே செட்டிலாயிட்டாரு. இப்போ பாப் பாடகர்களுக்கு செம டஃப் குடுப்பதாக கேள்வி. பசுநேசன் ஊரைவிட்டு போனதுல ஊர்மக்கள் ரொம்ப ஹேப்பி.

                                                    அடுத்ததா அந்த ஊருக்கு வந்தவர்தான் சின்னத்தம்பி. அவர் பாட்டு இல்லாம எந்த கொண்டாட்டமும் முழுமையடையாது. அவர் பேருதான் சின்னத்தம்பி, ஆளைப்பாத்தா நீர்யானை மாதிரி இருப்பாப்ல. உடல்வாகுல அந்த ஜில்லாவுலேயே அவர்தான் பெரியதம்பி. அம்பி கொழுகொழுன்னு அமுல்பேபி மாதிரி இருக்கானேன்னு எல்லாரும் கொஞ்சுறதை, தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டான் சின்னத்தம்பி. அவர் லேடீஸ் விசயத்துல வீக்குன்னு தெரிஞ்ச ஊர்க்காரங்க, பக்கத்து ஊர்ல இருந்து துணைநிலை ராணுவப்படையை வரவழைச்சு, ஏதோ தீவுக்கு அனுப்பினதா ஒரு பேச்சு அடிபடுது.

                                                     அந்த ஊர்ல நல்லா பாடி, பேருவாங்குனதுன்னா வெள்ளைச்சாமியும், சின்ராசுவும் தான். அதுல வெள்ளைச்சாமி சீனியர். அதுக்கு அப்புறம்தான் சின்ராசு. ராத்திரி எட்டு மணிக்கு அலாரம் வச்சிட்டுத்தான் பாடுவாங்க. ரெண்டுபேருக்குமே காதல் தோல்வி. அதிலேயும் வெள்ளைச்சாமியோட, "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" பாட்டும், சின்ராசுவோட, "ரோசாப்பு சின்ன ரோசாப்பு" பாட்டும் ரொம்பவே பிரசித்தம். அவங்க பாட்ட கேட்டவங்களுக்கு மட்டும் தான் தெரியும், அவங்களோட காதல்தோல்வியின் காரணம். பாட்டு பாடுறேன் கேளு.. கேளுன்னா, எவ அவனோட குடும்பம் நடத்துவா.

                                                     இதுக்கெல்லாம் முடிவு கட்ட, அந்த ஊர்ல இருக்குற ஒரு பெரியவர் துணிஞ்சிட்டார். அவர்தான் வெள்ளியங்கிரி தாத்தா. அவர் மிருதங்கத்தை எடுத்து, "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" ன்னு பாடுனதைக் கேட்டு, அந்த ஊர்ல ரெண்டுமுறை பூகம்பமே வந்துருச்சு. அதுக்கப்புறம் தான் ஊரே ஒண்ணுகூடி, இனிமே இந்த ஊர்ல யாரும் பாட்டுபாடக் கூடாதுன்னு தீர்மானம் போட்டு, ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வச்சிருக்காங்க.

Saturday 7 December 2013

ஒரு குண்டு கலர் பந்தயம்

    கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதில் மகிழ்ச்சி என்பது நம்முடைய ஜீன்லயே  கலந்தது போல.அதன் தூண்டுதலாக ஒவ்வொரு நாள் சாயங்காலமும்  ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தியேட்டருக்கு வரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டு வருவதற்காக, நண்பர்கள் புடைசூழ ஒரு நடை போய்விட்டு வருவதுண்டு.அது நம்ம கேப்டன் நடித்த “உழவன் மகன்” வெளிவந்திருந்த சமயம்.செம கூட்டமுன்னு ஊருக்குள்ள ஒரே பேச்சு. பக்கத்து ஊருக்காரங்கெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு கூட்டம் கூட்டமா வந்துருக்காங்கன்னு சொன்னவுடனே, வழக்கம் போல கெளம்பிட்டோம் நம்ம கேங் ஆளுங்களோட வேடிக்கை பாக்க.
                                                 நம்ம கேங்ல மார்க்ஸ்னு ஒருத்தன் கூடவே வருவான். அவனுக்கு கம்யூனிஸம்னா என்னான்னே தெரியாது.அவனோட அப்பா கம்யூனிஸ்டா என்னான்னு எங்களுக்கு தெரியாது.அவரு ஏதோ ஆசையில, மகன் பெரிய புரட்சியாளரா வருவான்னு நெனைச்சிட்டு பேரு வச்சிட்டாரு போல.இன்னமும் இதே மாதிரி ஊருக்குள்ள நெறைய பேரு, பேரு வச்சிக்கிட்டு திரியுறாங்கன்றது வேற விஷயம்.நம்ம மார்க்ஸ் ஒரு வெள்ளந்தி.நம்ம பயலுக அவனை பலவிதமா பேர் சொல்லி கூப்பிடுவானுங்க. மார்க்கஸு, மார்க்கோஸ்,மார்கஸ்,மாரஸ்னு. நல்லவேளை அப்போ  யாருக்கும் சரக்கு பேரு தெரியாததுனால மார்பியஸ்னு கூப்பிடல.(கோடான கோடி நன்றிகள் ஏசப்பா).நம்மாளு செம கலரா இருப்பான். புயல் மழையில நனைஞ்ச வயசான பனைமரம் போல.அவன் கலருக்கு அவன் மண்டைமுடி பிச்சை வாங்கணும்.ஆனா அவன் பல்லை பாத்தோமுன்னா, முத்து நமக்கு கருப்பா தெரியும். தாஜ்மகாலுக்கு கட்டுன பளிங்கு கல்லாட்டம் பளீர்னு ஜொலிக்கும்.சரி மேட்டருக்கு வருவோம்.மேட்டர்னா கதை தான்.
                                                       உழவன் மகனுக்கு வந்த கூட்டத்தை பார்க்க வழக்கம் போல போகும்போது ,திடீர்னு ஒரு போட்டி வந்துருச்சு.எதுத்தாப்புல வர்ற மொத பஸ்ஸோட கண்ணாடிய ஒரே கல்லுல உடைக்கணும்னு. கல்லெறியுறதுல கில்லாடி,எங்க கூட இருக்க மண்டையன் தான்.பத்து சிட்டுக்குருவிய ஒத்தைக்கல்லுல விழுக்காத்தட்டிருவான்.அவன் குறிக்கு ஒருகல் போதும்.மறுகல் தேவைப்படாது.குண்டு வெளாட்டுலேயே ஊறிப்போயி பக்கத்து ஊர்க்காரப்பயலுகள போண்டியாக்குனவன்.ஒரே கல்லுல பஸ் கண்ணாடிய உடைச்சா,ஒரு குண்டு கலரு பந்தயம்.மண்டையன் ரெடியாயிட்டான்.வாகா ஒரு கல்லை எடுத்து தூரத்துல வர்ற ராணி மங்கம்மா பஸ்ஸை பாத்துக்கிட்டு,புளியமரத்தடியில நின்னான்.கூடப்போன பயலுகளுக்கெல்லாம் அவனே ஒரு வேடிக்கையா இருந்தான். கம்பத்துக்கு போற ராணி மங்கம்மா பக்கத்துல வந்துருச்சு.மண்டையன் குறியெல்லாம் வைக்கல.கைக்கு தெரியும்ல அதோட குறி.ஒரே எறி.பஸ் கண்ணாடி படார்னு கல்கண்டு மாதிரி நொறுங்கிருச்சு.கண்ணாடி தெறிக்குறதுக்கு முன்னாடியே நம்ம பயலுக ஓடிட்டாங்க,தீக்கொழுத்தி மடத்துக்கு எதுத்தாப்புல இருக்க தென்னந்தோப்புக்கு.
                            பஸ்ஸை நிப்பாட்டிட்டு டிரைவரும்,கண்டக்டரும் கல்லை எறிஞ்சவனை தேடுறாங்க.அன்னிக்கு அமாவாசை இருட்டு மாதிரி இருக்கு. இப்போவே நம்மூரு அப்படித்தான் இருக்கு.அப்போல்லாம் சொல்லவா வேணும்.நம்ம பயலுக ஓடிப்போயி ஆளுக்கொரு தென்னைமரத்தை அணைவா புடிச்சு, மறைவா நிக்குறாங்க.கண்டக்டரும்,டிரைவரும் கண்ணை தேச்சுக்கிட்டு தென்னந்தோப்புக்குள்ள தேடுறாங்க.மார்க்ஸ் ஒரு குட்டி தென்னம்பிள்ளைகிட்ட ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான்.கண்டக்டரும் அவன் பக்கத்துலேயே நின்னுக்கிட்டு  தேடுறாரு.ஆனாலும் அவனை கண்டுபிடிக்க முடியல. இருட்டுல அவன் மேட்ச் ஆயிட்டான்.கால்மணி நேரமா அவன் பக்கத்துலயே ஆளை தேடுறாரு கண்டக்டர்.மார்க்ஸ்க்கு சிரிப்பை அடக்க முடியல.பக்கத்துல நிக்குற என்னையே கண்டுபிடிக்க முடியலையே, இந்தாளெல்லாம் எப்படி டிக்கெட் போடப்போறாரோன்னு, அடக்க முடியாத சிரிப்பை அவுத்து உட்டுட்டான்.பளீர்னு தெரிஞ்ச அவனோட முத்துப்பல்லை அடையாளம் கண்ட கண்டக்டர்,ஒரேயடியா அவனைப் புடிச்சுக்கிட்டு, “கல்லெறிஞ்சவனை கண்டுபிடிச்சிட்டேன்”னு டிரைவர்கிட்ட சவுண்டு விடவும், அவனை பிடிச்சுக்கிட்டு வண்டிய கெளப்பிட்டாங்க கம்பம் டிப்போவுக்கு.
                               பஸ்ஸுல மார்க்ஸை ஏத்திக்கிட்டு போனது தான் தாமதம். ஒளிஞ்சிருந்தவய்ங்க ஊருக்குள்ள தகவல் சொல்லிட்டாய்ங்க.ஆனா மார்க்ஸ் மட்டும் , ”காப்பாத்துங்க காப்பாத்துங்க’ன்னு பஸ் ஜன்னல் வழியா கத்திக்கிட்டே கம்பம் டிப்போவுக்கு போயிட்டான்.விஷயம் தெரிஞ்ச மார்க்ஸோட மாமா,டிப்போவுக்கு போயி,கண்ணாடிய உடைச்சதுக்கு எண்ணூறு ரூவா அபராதமும்,இலவச இணைப்பா சிலபல அடிகளும் கொடுத்து மார்க்ஸை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.அப்படி வந்த மறுநாள் தான் மார்க்ஸ், மண்டையனுக்கு குண்டுகலர் வாங்கிக்குடுத்தான்.

Saturday 16 November 2013

அணையாத காமம்

சுக்கிலத்தை சுரக்கும் முயற்சியில்,உள்ளறையில் கேட்கும் ஈனக்குரல்.அதற்கு குறுக்கு கோடாக பிளேடை கூர்மைப்படுத்தும் ஓசை.அவனது இசையும்,ஓசையும் ஒன்றே;இரண்டையும் கேட்டுக்கொண்டே செயல்படும் லாவகம் அவனுக்கொன்றும் புதிதல்ல.இத்தோடு பதிமூன்று.பயன்படுத்திய மூன்றோ நான்கோ தான் இசையுடன் உச்சமுற வைத்தவை.ஆனால் இவளின் முனகலெனும் அப்பாற்பட்ட இசை என்றுமில்லாத எழுச்சியை தூண்டி,வேலையில் வேகமுற வைக்கிறது.கிரஹப்பிரவேஷம் செல்கையில் ஏற்படும் பரவசம் ஒருபுறம்,வீட்டை இடிக்கையில் ஏற்படும் பரவசம் ஒருபுறம்.இரண்டும் சேர்ந்த எதையும் சேராதவன் தான் இவன்.                                                                                                                                                                                                                                                               அவள் கண்களுக்கு அடைக்கப்பட்ட கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்: இவன் கண்களுக்கு கதவை திறந்தால் மருண்டவிழி பார்த்தவுடன்,இதுவரை ஓசையெழுப்பிய பிளேடு பயன்படுத்தப்படும்.அவனை உச்சமடையச் செய்ய அவனுக்கென்ன தயக்கம்.அவனுக்கென்ன அவள் பொண்டாட்டியா..தன்னை வருத்தி உறவுகொள்ள.. ரசிக்கவும்,புசிக்கவும் பெண் மட்டுமல்ல,ஆணும் தான்.ஆனால் இவன் இரையல்ல.இவனுக்கு புசிப்பதே குறி.. அதுவே அவனது குறிக்கு குறி... பெண்ணை மென்மையாக கையாளுவதில் சிறந்த அவன்,வலியற்றிருக்கயெண்ணி மிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிக மெதுவாக அவளது அமுதக்குரல்வளையை கலைநயத்தோடு ஓவியன் கோடுவரையும் லாவகத்தோடு அறுக்கையில் காதலைவிட உயிர்தெறிக்கும் கண்களை பார்ப்பதிலே அவனுக்கு எச்சமில்லா உச்சம்.

இன்றிருப்பவள் காதற்கடவுளா..காமக்கடவுளா... விவரிக்க அவனொன்றும் அதற்குள் அடங்கியவனா? அவள் அதற்குமப்பால் எனுமெண்ணம் இதுவரை அடைந்த இன்பமெல்லாம் துன்பமென்னும் சேதி விளித்து, உச்சத்தை ஏற்படுத்திய அவளை உபயோகப்படுத்த வேண்டுமென, கூர்மைப்படுத்தி உயரத்தூக்கிய பிளேடால் உயரத்தூக்கிய குறியை ஒரேவெட்டு.

Tuesday 18 December 2012

பாலாவின் கடவுள்

அனைத்து பற்றுக்களையும் துறந்துவிட்டு வாழ்வின் இறுதியை நெருங்கிய அநேகமக்கள் கூடும் இடமான காசியில் இருந்துவரும் பலபிரிவு சாமியார்களையும், அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியுமே கூறுகிறது படத்தின் துவக்கம்.இறுக்கமான சிந்தனையை காட்டும் முயற்சியில்,யாருமே நுழையத்தவறிய,தயங்கிய தளத்தில் பயணித்த பாலா,ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை எழுத்திலிருந்து திரைக்கு மாற்றியுள்ளார். ஏழாம் உலகம் கடவுளைப்பற்றிய ஜெயமோகனின் கருத்துகளை பெரும்பான்மையானவர்களுக்கு சென்றடையாததால்,அதனைக் கொண்டுசேர்க்கும் முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் பாலாவின் இந்தப்படம்.வாழ்வின் மிச்சத்தைக் கழிக்க அநேகமக்கள் தேர்ந்தெடுக்கும் இடமான காசியில்,சாமியார்களாக இருப்பவர்களின் அடிப்படைத்தேவைகள் எளிதில் பூர்த்தியடைவதால், மிகுதியான சாமியார்களின் களமாக காசி இருந்துவருகிறது என்பதுடன் துவங்கும் இப்படத்தில்,மூத்த சாமியார் ஒருவரால்,”மேரே ப்ரம்மா,மேரே ஈஸ்வர்,அஹம் ப்ரம்மாஸ்மி” என்று உருவாக்கப்படுகிறார் கதாநாயகன். துஷ்டர்களை இனம் காணும் தன்மையும்,அழிக்கும் மனோதிடமும் உள்ளவனாக சித்தரிக்கப்பட்டுள்ள கதையின் நாயகன்,அதே மனநிலையுடன் (சொந்த)ஊருக்கு வருகிறான்.வாழ்வின் உச்சநிலையைக் கழிக்கவரும் மனிதர்களை மட்டுமே சந்தித்த அவன், வாழ்க்கையின் போக்கில் இருக்கும் மனிதர்களை சந்திக்கிறான்.இருந்தாலும் பழக்கப்பட்ட எண்ணத்தை மாற்றமுடியுமா என்ன?.அவன்தான் முக்திதேடும் மனிதர்களாலும்,நீதான் கடவுள் என்று கூறுபவர்களாலும் உருவாக்கப்பட்டவன் ஆயிற்றே.அதனால்தான் களம் வேறுபட்ட போதிலும் அவனின் மனநிலை அப்படியே இருக்கிறது.ஆகவே அவன் அம்மாவிடம் பேசும்போது,”ஐயிரண்டு திங்களாய்.....” என்ற பாடலை சொல்லுவதோடு,அந்தப் பெண்மணியிடம்,”தூமைன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்கிறான்.வசனகர்த்தா அந்தக்கேள்வியை அவளிடம் கேட்கிறாரா? அல்லது பார்வையாளர்களிடம் கேட்கிறாரா? என்பதே ஒரு கேள்வி. பிச்சையை மட்டுமே அறிந்தவர்களையும்,அடித்து துன்புறுத்தப்பட்டு பிச்சைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களையும்,வியாபாரப்பொருட்களாக முதலீடு செய்து,விலைக்கு வாங்கி பிச்சைக்கு பயன்படுத்தப்படுபவர்களையும் காட்டும்போது இயக்குநரின் தந்திரம்,இளகிய மனதினரின் கழிவிரக்கத்தை காசாக்க முயற்சி செய்கிறது.இதில் மனதிற்கு இதமாக(?) அவர்களை சித்திரவதை செய்யும் காட்சிவேறு.அப்போதுதானே தட்டில் அதிக காசு விழும். இதுபோன்ற மூர்க்க சிந்தனைகளையெல்லாம்,வலிமையான சினிமாவாக காட்டுவது என்பது பாலாவிற்கே உரித்தான பாணி.தமிழில் ஓர் உலகசினிமா என்று பறைசாற்றினாலும், குத்துப்பாட்டு என்ற முக்கிய அம்சம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த இயக்குநர்,இதில் அந்தக்குறை தெரியாமல் இருக்க,எம்.ஜி.ஆர்,சிவாஜி,சிம்பு பாடல்களைக்காட்டி தீவிரத்தை உணர்த்துகிறார். பின்னர்தான் கடவுளை பற்றிய விளக்கங்களை பாலா மற்றும் ஜெயமோகன் கூட்டணி விளக்கத்தொடங்குகிறது.தமிழ்சினிமாவில் இதுவரை எந்தப்படத்திலும், எந்த ஹீரோவும் கெட்டவர்களை அழித்ததில்லை(?).ஆனால் இதில் மட்டுமே பாலாவின் கடவுள் கெட்டவர்களை அழிக்கிறார்.இவர் மட்டுமே தன்னைக் கடவுள் என்று அறிவிக்கிறார்.ஏனெனில் பாலாவின் கடவுள் மட்டுமே,தான் நுகரும் பொருட்களில் அதிகமாக கஞ்சாவும்,வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளில் கொஞ்சம் சமஸ்கிருதமும் பயன்படுத்துகிறார். எல்லாரும் வணங்கும் சாமிக்கு கையில்லை,காலில்லை,வாய் பேசாது, கண் பார்க்காது,காது கேட்காது என்று உருவகப்படுத்திய இயக்குநர்,கடவுளின் கிருபையால் சாமி உயிருடன் இருப்பதுபோல காட்டிவிட்டார்.கதைக்கு தேவையோ என்னவோ சாமி சிலநேரம் பார்க்கவும் செய்கிறார்,பேசியும் விடுகிறார்.கடவுளின் இருப்பைக்காட்டி ஒருபுறம் சினிமா எடுத்து பணம் சம்பாதிக்கும்போது,கடவுளின் செயல்பாடு இல்லாநிலையைக்காட்டி (மௌனம் என்றுகூட சொல்லமுடியாது) பணம் சம்பாதிப்பதையும் குறைசொல்ல முடியாது. அதுதானே ஜனநாயகம்.அதிலும்,”அட நீ என்ன முருகா! வர வர பிச்சக்காரங்யகிட்டயே பிச்ச கேக்க ஆரம்பிச்சுட்ட” என்ற வசனம் சொல்லி,பிச்சைக்காரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் போது அதுவும் ஜனநாயகம். தான் பிச்சையெடுப்பதை குறையென்று உணரமுடியாத அளவிற்கு பழக்கப்பட்ட சிறுவனின் நக்கல் பேச்சின் வாயிலாக ஜெயமோகன்,”முருகா..நீ பாட்டுக்கு கோவிச்சுக்கிட்டு மலைக்கு மலை தாவிட்டு போயிட்ட..நாங்கல்ல பிச்சையெடுக்க கஷ்டப்படுறோம்” எனும்போது பணம் சம்பாதிக்க அவர் கையாளும் யுக்தி புரிகிறது.மேலும், “ஏய் மொட்டை..அன்னக்காவடி..பிச்சை போடுறா” “அன்ன லச்சுமி..ஆதி லச்சுமி... மகாலச்சுமி... அடியே ஜோதிலச்சுமி.காது கேக்காதது மாதிரி போறவ”.இந்த வசனத்திற்காகவே எல்லா லட்சுமிகளும் திரு.ஜெயமோகனின் வாசல்கதவைத் தட்டுவார்கள். இப்படித்தான் போகின்றன காமெடி என்ற பெயரால் காட்சிகள்.அதிலும் அந்த அரவாணி சாமியிடம்,”சாமி இத்தன வருசமா உன்ன மட்டும்தான சாமின்னு சொல்லிக்கிட்டு (நம்பவில்லை) இருக்கோம்.நல்ல வழிகாட்டு சாமி..இதுக்கும் மேல பேசாம இருந்து இவ சீரழிஞ்சு போனா நீ நாசமா நரக்கழிஞ்சு போவ” என்று சாபம் விடுகிறா(ள்)(ன்). கதையின் போக்கை சுவாரஸியமாக நகர்த்த ஏதோ போனால் போகட்டும் என்று சாமிய பேச வைத்துவிடுகிறார் பாலா.ஈனப்பிறவிகளின் குரலாக,”பாத்துப் புழுத்துறான்..தேவடியா மகன்” என்பது போன்ற சிறந்த வசனங்கள் ஜெயமோகனை ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன.கதைக்கு தேவையான மிக இயல்பான வசனங்கள் இவை. பிச்சைக்காரர்களின் கூட்டத்தலைவனின் முகவராக வரும் முருகன் கதாபாத்திரம்,எந்த வகையான மனநிலை கொண்டவன்?சுயநலத்திற்கு கடத்திவந்து,நானும் உன்னைப்போல பிச்சைக்காரிக்கு பொறந்தவந்தான் தங்கச்சி என்று சென்டிமென்டாய் பேசி பிச்சையெடுக்க வைப்பான்.சாராயம் குடித்துவிட்டு வந்து,பிச்சைக்காரர்களுக்கும் சாராயம் வாங்கிக்கொடுத்து,சந்தோசமா இருங்க,வாழ்க்கையில் சந்தோசம் தான் முக்கியம் என்று கூறுவான். அவன் தான் பிச்சைக்காரர்களின் கடவுளா பாலா சார்?.போதை அதிகமான பிறகு,பணத்தை அள்ளிவீசி,இதெல்லாம் நீங்க எனக்குப்போட்ட பிச்சை என்று வசனம் பேசுவான்.அவனுடைய பிச்சைக்காரர்கள் அவனுக்கு மட்டுமே சொந்தம்,வேறு யாரும் அவர்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சுயநலத்தால் கையாளும் யுக்திகள்தானா இவை. ஒருவேளை கதாநாயகியை காப்பாற்ற நினைக்கிறானா? அல்லது அவள் வாழ்வை சீரழிவில் இருந்து காக்கவா?.இதில் அவ்வப்போது ஆறுதல் வேறு.நல்லவேளை படத்தில் சாமிவேஷம் போட்ட எந்தப்பிச்சைக்காரனையும் யாரும் தூக்கிப்போகவில்லை.இல்லையெனில் வசனகர்த்தாவிற்கு அல்வா சாப்பிடுவது போல வசனம் எளிதாக உதித்திருக்கும். படத்தில் காதாபாத்திரங்களாக நடித்தவர்களின் உழைப்பு நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.கூடவே அவர்களின் எதிர்காலமும்(இனி பூஜாவை கனவிலும் நினைக்க மாட்டார்கள்).இசையென்ற அமைப்பு மட்டும் இல்லாதிருந்தால்,சம்பந்தமில்லாத இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் மனதைப் போல இருந்திருக்கும்.வழக்கம்போல மிகச்சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார் இளையராஜா.இசைப்பிரம்மாண்டம் என்றே சொல்லலாம்.அதிலும் ரமணமாலையில் இருந்து எடுத்து வழங்கியிருக்கிற,”பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்” பாடல் கனிய வைக்கிறது.ஏனோ துரதிர்ஷ்டம் காட்சியமைப்புகள் ஒத்துவரவில்லை.ராஜாசார் தயவுசெய்து இந்தப்பாடல்களை இதுபோன்ற சினிமாவிற்கு எடுத்தாளாமல் இருப்பது நன்று. முடிவில் படத்தில் ஈனப்பிறவியாக வரும் கதாநாயகியின் வாயிலாக, “நான் என்ன பாவம் செய்தேன்?என்னை ஏன் ரட்சிக்கவில்லை?” “எல்லா புகழும் இறைவனுக்கே..என்னைப் போன்றவர்களை படைத்தது அந்த இறைவனுக்கு பெருமையா?” “காளியாத்தா..மாரியாத்தா..இப்படி எந்தச்சாமியுமே என்னைக் காப்பாத்தவில்லையே” போன்ற கேள்விகளை பாலா முன்வைத்து,அவரே தீர்வும் சொல்லி விடுகிறார்.அந்தப்பிறவியில் இருந்து காக்கவும்,அடுத்த பிறவியில் இருந்து விடுவிக்கவும் அவனால் தான் முடியும்.ஈனப்பிறவிகளுக்கு மரணம்தான் தீர்வு.மூர்க்கச்சிந்தனையின் முடிவாக,வாழ இயலாதவர்களுக்கு அவன் அளிக்கும் வரம் மரணம்.அவன்தான் பாலாவின் கடவுள்(ஏனெனில் பிற கடவுள்கள் பிணத்தை உண்பதில்லை). குறிப்பு:சிலபடங்கள் எடுத்து முடிந்த பின்னர் தாமதப்படுவதைப்போல,ஏற்பட்ட தாமதம்.

Saturday 8 December 2012

எனது ட்வீட்டுகளில் சில..

நீ நல்லவன் தான்.ஆனா உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் கெட்டவங்ய #என்னை சுத்தி இருக்கிறவன் சொன்னது ____________________________________________________________________ ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமெனில், இறைவன் தற்காலிகமானவனே.. ____________________________________________________________________ திரைப்படங்களை ஆடியோ கேசட் வழியாக கேட்டு இன்புற்றது எமது சமூகம் மட்டுமே..அவ்வளவு கிரியேட்டிவிட்டி... _____________________________________________________________________ கடவுளுக்கு பூமி மிகவும் பிடித்துவிட்டது போல.ஆகவே குழந்தைகளாக பிறந்து கொண்டே இருக்கிறார்.. _____________________________________________________________________ ஆரம்ப கலவி மிக முக்கியமானது.. ______________________________________________________________________ உயிர் போகும் இறுதி நொடியில் இருக்கும் யோக்கியனாக ,வாழ்நாள் முழுதும் வாழ ஆசை.. _______________________________________________________________________ முடிவு என்பது ஒருமுறைதான்..அதை மாற்றினால் அது இன்னொரு ஆரம்பம் தான்.. ______________________________________________________________________ நீ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கெட்டவன் அல்ல.உனது அம்மாவால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நல்லவனே.. _______________________________________________________________________ எல்லாருக்கும் தெரிந்த போலியான உரையாடல், “எப்படியிருக்கே” “நல்லாயிருக்கேன்” என்பதே.. ______________________________________________________________________ ரத்தத்தை விட கண்ணீர் வலிமையுடையது.. _____________________________________________________________________ சுருங்கிய ரத்ததுளியின் நீட்சியில் பிரதிபலிக்கிறது உனது பிம்பம்.. ____________________________________________________________________ விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது காதல்... ____________________________________________________________________ கம்ப்யூட்டர் ஸ்லோவா இருக்குன்னு வருத்தப்படாதீங்க.. கம்ப்யூட்டரை விட நீங்க ஸ்பீடா இருக்குறதா எண்ணி மனச தேத்திக்குங்க..#அவ்வ்வ் ____________________________________________________________________