Wednesday 10 December 2014

சிங்கம் PART 3


                             போதைமன்னன் டேனியை அரெஸ்ட் பண்ண கையோட, அவனுக்கு தண்டனை வாங்கி தர்றதுக்கு எவிடென்ஸ் கலெக்ட் பண்றதுக்காக சுவிட்சர்லாந்து போறாரு துரைசிங்கம். யாருக்கும் சந்தேகம் வராம இருக்குறதுக்காக, சுவிட்சர்லாந்துல இருக்கும் "காளியம்மன் மாரியம்மன் இன்டர்நேஷனல் பேங்க்"ல செக்யூரிட்டியா வேலைக்கு சேர்றாரு. அப்போதான் டெய்லி இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் அங்கு வந்து போறதைப் பாக்குறாரு. உடனே தனக்கு எப்பவும் சப்போர்ட் பண்ற அமைச்சருக்கு மிஸ்டுகால் குடுக்குறாரு. அமைச்சர் அரசாங்க போன்ல கால் பண்ணி,
"என்னாச்சு துரைசிங்கம்"
"சார்.. நாம நினைச்சது மாதிரி இல்ல சார்.அதைவிட இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கிற மாதிரி கருப்பு பணத்தை எல்லாம் பதுக்கி வச்சிருக்காங்க"
"இப்ப என்ன செய்யுறது துரைசிங்கம்"
"கொஞ்சம் சுண்ணாம்புக்கல்லும், ஒரு தென்னைமட்டை பிரஷ்ஷும் அனுப்பி வைங்க.வெள்ளை அடிச்சு வைக்கிறேன். உடனடியா ஒரு ஆபரேசன் பண்ணனும் சார்"
"ஏதாவது கல்லடைப்பா துரைசிங்கம்"
"சார்.. பதிலுக்கு மொக்கை போட்டது போதும். உடனே "ஆபரேஷன் பி" ஸ்டார்ட் பண்ணனும். பி ஃபார் பிளாக் மனி"
"என்னாது பிளாக் மனியா.."
"ஆமா சார்.நீங்க உடனடியா நம்ம பிரதமர்கிட்ட பேசுங்க"
"என்னாது பிரதமர்கிட்ட பேசணுமா.."
"யோவ்..நான் சொல்றதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கியா.. இரு இந்தியா வந்து உன்னை வச்சிக்கிறேன்"
....போன் கட். (இடைவேளை)
                                           ஆபரேசன் பிளாக் மனிப்படி, துரைசிங்கம் பழைய பேப்பர் வாங்குற ஆளு மாதிரி ஒவ்வொரு பேங்க்கா போயி, "பழைய நோட்டு இருக்கா.. பழைய நோட்டு இருக்கா"ன்னு கூவுறாரு. எந்த பேங்க்லயும் ஒரு தூசிகூட அசையல. எந்த பேங்க்லயும் எதுவுமே இல்ல. அப்போதான் தெரியுது டெய்லி அங்க வந்துபோன இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் பணம் போட வரலை.. போட்ட பணத்தை எடுத்துட்டு போகத்தான்னு. இப்போ துரைசிங்கத்தோட அடுத்த புராஜெக்ட் அந்த பணத்தையெல்லாம் தேடி, அண்டார்டிகாவுக்கு போறது தான்.